நம் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான பொறுப்புகளில் ஒன்று குழந்தைகளுக்கு பெற்றோராய் இருப்பது. மிகவும் சவாலான இப்பொறுப்பை தங்களால் திறம்பட வகிக்க முடியுமா என்ற சந்தேகம், இன்றைய இளம் தலைமுறை பெற்றோர்களில் பெரும்பாலோரிடம் காண முடிகிறது.
தங்கள் பிள்ளைகளின் வாழ்வில் வரும் எல்லா ஏற்ற, தாழ்வுகளிலும் அவர்களுக்கு துணையாக இருப்பதுடன், அவர்களது சுதந்திரமான வளர்ச்சியை அருகே இருந்து கண் குளிரக் காண வேண்டும் என்பதே ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லும்போதும் பெற்றோரின் ஒற்றை விருப்பமாக உள்ளது.
சொல்லப்போனால், இன்று பெற்றோர்களாக இருப்பவர்கள் தங்களின் பிள்ளைப் பருவத்திலும் இப்படிதான் இருந்திருப்பார்கள். ஆனால், நல்ல வேளையாக உங்களின் வாழ்க்கை செம்மையாக அமைவதற்கான பாதையை உங்களது பெற்றோர் அன்றே வகுத்து தந்துள்ளனர். உங்கள் மீதான அவர்களின் அன்பை, இளம் பெற்றோராக நீங்கள் மீண்டும் உணர வேண்டுமா?... இதோ இந்த வீடியோவைப் பாருங்கள்...