மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
செயின் பறிப்புக்காக நடைபெறும் கொலைச் சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிகிறது. நகையை கொள்ளையடிப்பது மட்டுமல்ல அதிலிருந்து மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க கொலை செய்யவும் இந்த குற்றவாளிகள் தயங்குவதில்லை.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.